கொரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து திமுக தலைவர் நேரில் சென்று விசாரித்தார்.
சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதி செய்யபட்டது .
இதனையடுத்து மூச்சு திணறல் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் 80 சதவிகிதம் செயற்கை சுவாசம் அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்று உடல் நலம் சற்று முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஜெ அன்பழகன் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
இன்று அவரின் உடல் நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.