தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 2-ம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும்.

நேர்காணலுக்கு வருபவர்கள் ஆதரவாளர்களை அழைத்து வர அனுமதியில்லை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே