ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக வரும் 28-ந் தேதி திமுக போராட்டம் : அமைச்சர் உறுதி

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ந் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் மத்திய பாரதிய ஜனதா அரசு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எல்லாம் நடத்த தேவையில்லை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கபட நாடகத்தை காட்டுவதாக கூறியுள்ளார்.

எனவே விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 28-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தான் நாடக நடிகர் எனவும், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு விட்டு இப்போது எதிர்ப்பது தான் நாடகம் எனவும் விமர்சித்தார்.

மக்கள் ஏற்காத ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே