தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இன்றைய ( 3.8.2020) கொரோனா பாதிப்பு விவரங்கள்..!!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,609 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு விவரம்:

மேலும், இன்று 58,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 28,37,273 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா தொற்று உள்ளதா என இன்று 56,278 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை 27,33,295 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 109 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, தமிழகம் முழுவதும் இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,800 ஆக உள்ளது. இதன் காரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 56,698 ஆக அதிகரித்துள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே