தமிழகத்தில் மதுக்கடை பார்களை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுவே அரசாங்கத்தின் வருமானத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே பல்வேறு நலத்திட்டப் பணிகள் செய்யப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராடி வருகின்றன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுக்கடைகளுடன் பார்கள் இணைந்து செயல்படுவது என்பது அரசின் கொள்கை முடிவு.

இதில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது. எனவே, வழக்கைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், சட்ட விரோதமாக செயல்படும் பார்கள் தொடர்பாக மனுதாரர் மனு செய்தால் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.