சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசு வழங்கி முதலமைச்சர் வாழ்த்து

தமிழ்க முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (24.8.2020) தலைமைச் செயலகத்தில், 2019-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற  பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி. மு. பூரணசுந்தரி மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.னு.பாலநாகேந்திரன் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் திரு.சா. விஜயராஜ் குமார், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே