எதிரிகளை வீழ்த்த எடுக்கவேண்டிய ஆயுதம் கல்வி ஒன்றுதான் என்பதை அசுரன் திரைப்படம் சொல்லியிருப்பதாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், பூமணியின் வெக்கை நாவலை இவ்வளவு சுவாரஸ்யமாக எடுக்க முடிந்ததால், பல நாவல்களை திரைப்படம் ஆக்கலாம் என்ற நம்பிக்கையை வெற்றிமாறன் விதைத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாகித்ய அகடமி விருது பெற்ற “அஞ்ஞாடி” நாவலையும் யாரேனும் படமாக்குவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அசுரன் படத்துக்கு பல விருதுகள் அணிவகுத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சரவணன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என கூறியுள்ளார்.
ஒரே மண்ணில் பிறக்கிறோம் ஒரே மொழியை பேசுகிறோம் இது போதாதா எல்லோரும் சேருவதற்கு என்று படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்தை போன்று,
அந்த ஆசை நிறைவேறும் நாளுக்காக காத்திருப்போம் என சரவணன் தெரிவித்துள்ளார்.