மீண்டும் சரியும் பங்குச் சந்தை?.

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், பிற்பகலில் சரிவுடன் நிறைவடைந்தது.

வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 125 புள்ளிகளை எட்டியது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக இது பார்க்கப்படுகிறது. எனினும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், பிற்பகலில் சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிந்து, 40 ஆயிரத்து 821 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 36 புள்ளிகள் குறைந்து, 12 ஆயிரத்து 37 புள்ளிகளில் நிலை கொண்டது. தொலைத் தொடர்பு, சாப்ட்வேர் நிறுவனங்களின் பங்கு விலை அதிகமாக சரிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து, 71 ரூபாய் 48 காசுகளாக இருந்தது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே