சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 19 பேர் இறந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வனராஜா என்பவர் மரணமடைந்துள்ளார்.

சாத்தூர் அருகே உள்ளது ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரிக்கு சொந்தமான அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்குகிறது இந்த ஆலை.

இங்கு 35-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் வழக்கம்போல் அந்த ஆலையில் பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வந்தன.

அப்போது ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது.

தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியது. இதனால் அநத 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்தின.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகிவிட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 பேர் பலியாகிவிட்டனர்.

மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வனராஜா என்பவர் மரணமடைந்ததால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே