தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.