புதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று…!

புதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மாநாடு சென்று வந்த, புதுச்சேரியைச் சேர்ந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் இருந்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களுக்கும் பரிசோதனை நடந்து வருகிறது.

அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறது போலீஸ்.

இந்த பகுதியில் இருந்தோர் புதுச்சேரியில் எங்கெங்கு பயணித்தனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

பாதிக்கப்பட்டோரில் ஒருவர் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரின் கடையில் ஏராளமானோர் இறைச்சி வாங்கிச்சென்றனர்.

கேரளாவை ஒட்டிய மாஹேவில் ஒருவருக்கு கொரோனா உள்ளது தெரியவந்ததை அடுத்து புதுச்சேரியில் மூவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே