தமிழகத்தில் மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக சென்னையில் இன்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,770ஆக உயர்ந்தது!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.