“Coming Soon”.. தமிழகத்தில் வரப்போகிறது நகரும் ரேஷன் கடை: அமைச்சர் செல்லூர் ராஜு!!

தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடை தொடங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, ” கூட்டுறவு துறைக்கான அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.

கூட்டுறவு வங்கிகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்கடன் கொடுத்து வருகிறோம். கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளபடி என்பது இல்லை.

ஆனால் விவசாயிகளுக்கு பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கொடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் 3,501 ரேஷன் கடைகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வு செய்து விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். சென்னையில் 400 நகரும் ரேஷன் கடைகள் வரை திறக்கப்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே