அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது- ராதாகிருஷ்ணன்

கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாமலே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்று, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று காலை கோயம்பேடு பகுதிக்குச் சென்று, அங்கே ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது பாதிப்பு கண்டறியப் படுபவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை. 

ஆனால் அவர்களுக்கு பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது.

இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாக தெரியவருகிறது.

கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அஞ்ச தேவையில்லை; ஆனால் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே