சென்னையில் கொரோனா தொற்று : மண்டல வாரியான முழு விவரம்..!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கண்டந்துள்ளது மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.. கொரோனாவுக்கு 3,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,278 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

*15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

*திரு.வி.க.நகரில் 750 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 973 பேருக்கும், அண்ணாநகரில் 514 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

*தண்டையார்பேட்டையில் 528 பேரும், தேனாம்பேட்டையில் 669 பேரும், திருவொற்றியூரில் 137 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*வளசரவாக்கத்தில் 494 பேருக்கும், பெருங்குடியில் 80 பேருக்கும், அடையாறில் 334 பேருக்கும், அம்பத்தூரில் 304 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

*ஆலந்தூரில் 77 பேருக்கும், மாதவரத்தில் 105 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 82 பேருக்கும், மணலியில் 84 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே