வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களில் 9 சிங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டு, விலங்குகளை பராமரிக்க ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் சிங்கங்களில் நீலா என்ற சிங்கம் திடீரென சளி மற்றும் பசியின்மை தொல்லை ஏற்பட்டு நேற்று உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து அங்குள்ள 11 சிங்கங்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து சிங்கங்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு முன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே