இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,14,835 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.59 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 1,78,841 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 13.23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.34 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 22,91,428 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே