இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

மேலும் ஒரே நாளில் 49,881 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 80.4 லட்சத்தை கடந்தது.

6.03 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1,20,527 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று (அக்.,28) ஒரே நாளில் 10,75,760 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 10 கோடியே 54 லட்சத்து 87 ஆயிரத்து 680 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே