தஞ்சையில் மேலும் 2 பள்ளிகளில் கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளருக்கு கொரோனா இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு உதவிப்பெறும் பள்ளியில், கடந்த 8 ஆம் தேதி மாணவி ஒருவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து இதர மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து மேலும் 36 மாணவிகளுக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே