செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அம்மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,082 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 18,735 ஆக இருந்தது. நேற்று மட்டும் 291 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனால் செங்கல்பட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,408 ஆக அதிகரித்திருந்தது. மேலும் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 4 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதுவரை 316 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,011 ல் இருந்து 3,358 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று எத்தனை பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பது குறித்து மாலை அரசு வெளியிடும் அதிகாரப்பூரவ அறிக்கையில் தெரியவரும்.