#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 06) 3,827 பேருக்கு கொரோனா; 61 பேர் பலி!

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் இன்று 61 பேர் பலியாகினர்.

சென்னையில் மட்டும் இன்று 1,747 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,827 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 61 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. இதில் 66,571 பேர் குணமடைந்துவிட்டனர்.

இன்று ஒரே நாளில் 61 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 1,571 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே