இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸின் தாக்கத்தால், கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துவிட்டது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது

இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணக்கை 480 ஆக அதிகரித்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 11 ஆயிரத்து 906 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,991 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனாவால் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்,

அதில் மத்தியப் பிரதேசத்தில் 12 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும், டெல்லியில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், ஜம்மு காஷ்மீர், பிஹாரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 194 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 201 ஆக அதிகரித்துள்ளது. 

அதாவது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 69 ஆகவும், குஜராத்தில் நேற்று 3 பேர் பலியானதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 18ஆகவும், டெல்லியில் நேற்று 4 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 15 பேரும், ராஜஸ்தானில் 11 பேரும், ஆந்திராவில் தலா 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் 14 பேரும், கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் தலா 13 பேரும், மேற்கு வங்கத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5 பேரும், ஹரியாணா, கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்கண்ட், பிஹாரில் தலா 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 3,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

331 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 1,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 283 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 1,229 பேரும், தெலங்கானாவில் 766 பேரும், கேரளாவில் 396 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 1,310 பேரும், கர்நாடகாவில் 359 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 1099 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 328, மேற்கு வங்கத்தில் 287, பஞ்சாப்பில் 202, ஹரியாணாவில் 225, பிஹாரில் 83, அசாமில் 35, உத்தரகண்ட்டில் 40, ஒடிசாவில் 60, சண்டிகரில் 21, சத்தீஸ்கரில் 36, லடாக்கில் 18 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 12 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 36 பேர், புதுச்சேரி7 பேரும்,மேகலாயாவில் 9 பேர், ஜார்க்கண்டில் 33 பேர், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே