#BREAKING : தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 24) 5,967 பேருக்கு கொரோனா; 97 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,79,385 லிருந்து 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. 2,32,679 ஆண்கள், 1,52,644 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,19,327 லிருந்து 3,25,456 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது.

21 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 2,405 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே