எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்

கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியமுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தந்தையிடன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரசிகர்களின் பிரார்த்தனையால் அவர் மீண்டு வருவார் என்றும் அவரது மகன் சரண் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே