தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 31) 5,956 பேருக்கு கொரோனா; 91 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,150 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில், மேலும் 91 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே