சித்ரா தற்கொலை..; வேறு காரணம் இருந்திருக்கலாம் – ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரன்

சித்ராவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை என ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ விசாரணையை முடித்த பின் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சித்ரா தற்கொலை குறித்த விசாரணை ஒரு பக்கமாகவே நடைபெறுவதாக தெரிகிறது.

சித்ராவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை.

என் மகனிடம் 6 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் 7வது நாள் ஆர்டிஓ விசாரணைக்கு முன்பு அவசர அவசரமாக கைது செய்தனர். சித்ராவின் செல்போன் தகவல்களை ஆராய்ந்து, அதில் கிடைக்கும் தகவல்களை ஆராய வேண்டும். 

சித்ராவிற்கு ஏதோ ஒரு வகையில் பெரிய மன அழுத்தம் இருந்துள்ளது.

ஏதேனும் பொருளாதார பிரச்சனைகள் சிக்கி உள்ளாரா? அது சம்பந்தமாக யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

சித்ரா இறப்பதற்கு முன்பு 10 நாட்களுக்கு முன்பாக என்னிடம் நன்றாக பேசினார்” எனக் கூறினார்.

முன்னதாக கடந்த 9 ஆம் தேதி பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டை தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடன் நடிக்கும் நடிகர்களுடன் சந்தேகப்பட்டு அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 14 ஆம் தேதி கணவர் ஹேமந்த் ரவியை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைசிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே