ஆபாச படம் – சென்னையில் 30 பேர் கொண்ட பட்டியல் தயார்!

சென்னையில், குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த 30 பேர் கொண்ட பட்டியலை சென்னை போலீசாருக்கு வழங்கியுள்ளதாக ஏ.டி.ஜி.பி ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை ஏடிஜிபி ரவி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஏ.டி.ஜி.பி ரவி, காவலன் SOS செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தாலும், 4 லட்சம் பேர் தான் தங்களுடைய முழு தகவல்களை பதிவேற்றி உள்ளனர் என்றார்.

தவறான நோக்கில் யாரேனும் செயல்பட்டால், கொலை செய்யவும் தயங்க வேண்டாம் எனவும், அது தற்காப்பு தான் என்றும் மாணவிகளிடம் ஏ.டி.ஜி.பி ரவி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்த 30 பேர் பட்டியலை சென்னை போலீசாருக்கு கொடுத்துள்ளதாகவும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே