ஐ.டி.நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்

ஐ.டி.துறைகளில் பணியாளர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 18-வது சர்வதேச தகவல் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழகம் முன்னிலை வகித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர் முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் நிதி நிர்வாகத்தை காரணம் காட்டி ஐ.டி.நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இக்கருத்தரங்கில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே