விவசாய பணிகளில் இருந்தவர்களிடம் நலம் விசாரித்து, முகக்கவசம் வழங்கிய முதல்வர் பழனிசாமி!

திருவாரூர் கோவில்வெண்ணி பகுதியில் வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி உரையாடினார்.

கொரோனா பரவல் தமிழகத்தில் வேகம் காட்டி வரும் நிலையில் அதை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் மாவட்டம் தோறும் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தஞ்சை, திருவாரூரில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் கோயில் வெண்ணி அருகே ஆதனூர் கிராமத்தில் சாலையோர நெல் வயலில், களை பறித்துக்கொண்டிருந்த விவசாய பெண்களிடம் நடைபெறும் விவசாய பணிகள் குறித்து கலந்துரையாடினார். 

அவருடன் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜூம் உடனிருந்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே