நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி..!!

நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி.

அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு பாதியில் ரத்தானது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்தது.

இருப்பினும் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் நேற்று ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே