ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கை கண்காணித்து தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த அமைச்சர்கள் நியமனம். முழு ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த அறிவுறுத்தல்.

சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு நியமனம். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் சா.மு.நாசர் நிமியக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜி, திருப்பூர் மாவட்டத்திற்கு மு.பெ சாமிநாதன், மதுரை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அனைத்து மாவட்டத்திற்கும் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே