கொரோனாவால் தமிழகத்தில் இன்று 448 பேர் உயிரிழப்பு ..!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 63லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 35,873 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18லட்சத்து 6 ஆயிரத்து 861ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,84,278ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 19,895பேர் ஆண்கள், 15,97பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 5,559பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று 448பேர் உயிரிழந்துள்ளார். 169பேர் தனியார் மருத்துவமனையிலும், 279பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,046ஆக அதிகரித்துள்ளது. இன்று 25,776பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,02,537ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே