அதிமுக நிர்வாகிகளுடன் இன்று முதல்வர் – துணை முதல்வர் ஆலோசனை..!!

சசிகலா பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ள நிலையில், அதிமுகவினருடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் சிலர் சுவரொட்டிகள் ஒட்டிவரும் நிலையில், ஆலோசனை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே