தென் தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவக்காற்று காரணமாகத் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடதமிழகத்தல் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதி, மதுக்கூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே