நிவர் அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என கூறப்படுகிறது.
புதுச்சேரிக்கு 550 கி.மீ, சென்னைக்கு 590 கி.மீ தொலைவில் தாழ்வுமண்டலம் நிலவுகிறது.