JUST NOW : தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவு இறுதி பட்டியலை அசாம் மாநிலத்தில் அண்மையில் மத்திய அரசு வெளியிட்டது.

அதில், 19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்ததாக எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், உடனடியாக இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பெற்றொரின் பிறந்த இடம், தேதி உள்ளிட்ட 21 அம்சங்களை பொதுமக்கள் குறிப்பிட வேண்டும்.

ஆனால் பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

முன்னதாக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான கணக்கெடுப்பு வரும் ஏப்ரல்  முதல் தேதியில் இருந்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பட்ட இடத்தில் 6 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலம் வசிப்பவர்கள் இயல்பான குடிமகனாக கருதப்பட்டு பதிவேட்டில் இடம் பெறுவர். இதில் பதிவு செய்வது கட்டாயமாகும். 

இத்திட்டத்திற்காக 8500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அஸ்ஸாம் தவிர அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே