செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே இரு பேருந்துகள் மோதி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது நிலைத்தடுமாறிய அந்த பேருந்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது.
இதில் அரசு பேருந்தின் வலது புறத்தில் உள்ள இருக்கைகள் முழுவதும் சேதமடைந்தன. இந்த விபத்தில் இரு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
விபத்தில் காயமடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து கல்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.