தமிழ்நாட்டில் இன்று 15,684 பேருக்கு கொரோனா உறுதி..!!

தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 94 போ திங்கள் கிழமை ஒரே நாளில் உயிரிழந்தனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடா்பாக மாநில சுகாதாரத்துறை திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சனிக்கிழமை 15,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,672 -ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளதால், இதுவரை மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 13,651-ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் 60 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் உயிரிழந்தனர். ஆண்கள் 9,605, பெண்கள் 6,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே