விருதுநகர் சாத்தூர் அருகே நேற்று பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் பட்டாசு ஆலை தரைமட்டமான நிலையில் அங்கு பணியில் இருந்த 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த அதிர்ச்சியும் சோகமும் அடங்குவதற்கு அங்கு மற்றொரு பட்டாசு ஆலையில் ஏற்பட்டுள்ள வெடிவிபத்து பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி காக்கிவாடன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலும், அங்கு வேலை நடந்ததா? எத்தனை பேர் பணியில் இருந்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் இல்லை. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.