புதுச்சேரியில் ஆளுநர் உரையின்றி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர்!

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது.

இதுகுறித்து புதுவை ஆளுநர் கிரண்பேடி இன்று முதல்வர் நாராயணசாமி க்கு அனுப்பியுள்ள கடிதத்தில், எந்த ஒரு பட்ஜெட்டாக இருந்தாலும் ஓர் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளை முழுமையாக தயாரித்த பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

புதுவை பட்ஜெட்டில் ஓராண்டுகான மானிய செலவு தொகை உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை.

எனவே யூனியன் பிரதேச விதிகளின்படி உரிய அனுமதி பெற்ற பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

ஓராண்டு மானியத் தொகை உள்ளிட்ட விவரங்களை சரியாக கணக்கிட்டு புதிய கோப்பை ஆளுநரின் அனுமதிக்காக அனுப்ப வேண்டும். 

அதன்பின்னரே பேரவையில் தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண்பேடி.

புதுவை பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது.

பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல்வழங்காத நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநர் கிரண்பேடிக்கு 15 நிமிடம் காத்திருந்த நிலையில் அவர் வராததால் கூட்டம் தொடங்கியது. இதை தொடர்ந்து மதியம் 12.05 மணிக்கு முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே