இன்று முதல் அரசு கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்

தமிழகத்தில் இன்று முதல் ஆன்லைனில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பதிவு தொடங்குகிறது.

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் கலை- அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கல்லூரிகள் நேரடியாக வழங்க அரசு தற்போது தடை விதித்துள்ளது.

கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக முதல் முறையாக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்திருக்கிறது.

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான இணையதள முகவரிகள்

www.tngasa.in

www.tndceonline.org

அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை இன்று மாலை 6 மணி முதல் தொடங்குகிறது.

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்காக இணையதள முகவரிகள்

www.tngptc.in

www.tngptc.com

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு இப்போது முதலே விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான சிறப்பு மையங்களையும் தமிழக அரசு அமைத்திருக்கிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே