சென்னையில் கொரோனாவால் இன்று (ஜூலை 20) ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முன்பு இருந்த அளவை விட குறைந்து கொண்டு வருவதாக தெரிகிறது.

மேலும் பாதிப்பையும் உயிரிழப்பையும் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 17 பேரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே