#BREAKING : ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!

இன்று முதல் 2ம் கட்ட ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் , புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.

1. பேருந்து, ரயில், விமான சேவைகள் இயங்காது

2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது

3. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

4. சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது

5. ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகள் இயங்கக்கூடாது

6. மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள் , மண்டபங்கள் மூடப்பட வேண்டும்

7. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது

8. வழிபாடு தலங்கள் அனைத்திலும் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது

9. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை:

1. அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்

2. மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்

3. 50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்

4. பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்

5. வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம்,

6. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்

7. நூறு நாள் வேலைத்திட்டங்களில் சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம்

8. தபால் நிலையங்கள், பெட்ரோல்பங்க்குகள் உள்ளிட்டவை இயங்கும்

9. சாலை, ரயில், விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும்

10. அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், லேப் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இயங்க அனுமதி

11. ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம்.

12. ஐடி சேவைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்

13. கிராம அளவிலான இ சேவை மையங்கள் இயங்க அனுமதி

14. கூரியர் சேவைகளுக்கு அனுமதி

15. ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோருக்கு அனுமதி

16. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி. பணியாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்

17. கிராமப்புறங்களில் செங்கல் சூளைகளுக்கு அனுமதி

18. கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி.

19. 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்.

ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே