தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3 -ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது டிசம்பர் 27 மற்றும் 30 தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக டிசம்பர் 25-ஆம் நாள் கிறிஸ்துமஸ் பண்டிகை, தேர்தலை தொடர்ந்து புத்தாண்டு விடுமுறை என ஜனவரி 1-ஆம் தேதி வரை தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடப்பதால் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுவதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3 -ஆம் தேதி திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.