மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் – கமல்ஹாசன்

மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம். செய்யக்கூடிய வாக்குறுதிகளை தான் தந்துள்ளோம்.

50 லட்சம் வேலைவாய்ப்பு என்பது சாத்தியமானது. அதனை ரூ. ஆயிரம், 2 ஆயிரத்திற்கு விற்று விடாதீர்கள்.இங்கு கூடியிருப்பது தானாக சேர்ந்த கூட்டம்.

இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் என்பதை அறிவித்த ஒரே கட்சி ம.நீ.ம. செய்யக்கூடியதை மட்டுமே நாங்கள் சொல்லி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே