BREAKING NEWS : ரஃபேல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் ரஃபேல் கொள்முதலில் ஊழல் இல்லை என்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே