BREAKING NEWS : திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது..!!

திமுக சார்பாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள பேரணியில் மக்கள் நீதிமய்யம் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் திமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

மேலும் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஆதரவையும் திரட்டியது.

இந்நிலையில் திமுக சார்பாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் 23ஆம் தேதி பேரணி நடைபெறும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை என மு.க.ஸ்டாலினிடம் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி சவுரி ராஜன் திமுக தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்துகொள்வது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கருத்துக்களை ஸ்டாலின் உடன் ஆலோசித்ததாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே