BREAKING : தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மை மற்றும் சாணம் வீச்சு

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மை மற்றும் சாணம் வீசி திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

சாணம் வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த போலீசார் அவமதிக்கப்பட்ட வள்ளுவர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தனர்.

கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்துள்ளது வெள்ளை நிற ஆடையா?? அல்லது காவி நிற ஆடையா?? என சர்ச்சை என்பது இருந்துள்ளது.

இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் கண்ணில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிக்கும் செய்துள்ளனர்.

இது அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் தற்பொழுது திருவள்ளுவர் சிலை என்பது வெளிநாடுகளில் திறந்து அதேபோல திருக்குறள் என்பது அந்நிய மொழியில் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இது மாதிரி ஒரு சர்ச்சை நடந்திருப்பது ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமரசத்தை விரும்பக்கூடிய அனைவருக்கும் சமமான திருவள்ளுவர் சிலை மீது இது போல ஒரு அவமானமான செயல் என்பது நடைபெற்றுள்ளது என்பது இந்த பகுதியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செய்த நபர்கள் யார் என்பது குறித்து தஞ்சை தமிழ் பல்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே