#BREAKING : தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஏற்கனவே 3 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் இருவர் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், ஒருவர் நியூஸிலாந்திலிருந்து வந்தார் என தெரிவித்தார்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே