#BREAKING : தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60, 739. மேலும், 230 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 32,075.

இதுவரை 6,095 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 690 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்றைக்கு புதிதாக 48 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 42.

மீதியுள்ள 6 பேரில் 2 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

நான்கு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். எனவே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே